![]() |
யானைகள் |
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரை வாழ் விலங்கு ஆகும்.
ஆபிரிக்க யானைகள் மிக குறுகிய காலம் உறங்கும். யானை சராசரி நாளொன்றுக்கு இரண்டு மணிநேரம் தூங்கும் சில சமயங்களில் உறங்காமல் இருக்கும் மற்றைய விலங்கினங்களின் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து 46 மணிநேரங்கள் உறங்காமல் 30 கிலோமீட்டர் கள் தூரம் நடக்கும்
ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.
உலகில் மூன்று வகையான யானை இனம் காணப்படுகின்றது
- ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்
- ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்
- ஆசிய யானைகள் ஆகும்
ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை
ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை.
யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.
0 comments:
Post a Comment