Saturday, October 28, 2017
ஆறு கால்கள் உடைய பூச்சிகள்
October 28, 2017
No comments
Thursday, October 26, 2017
விலங்குகள்
October 26, 2017
No comments
யானை
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரை வாழ் விலங்கு ஆகும்.
![]() |
யானைகள் |
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரை வாழ் விலங்கு ஆகும்.
ஆபிரிக்க யானைகள் மிக குறுகிய காலம் உறங்கும். யானை சராசரி நாளொன்றுக்கு இரண்டு மணிநேரம் தூங்கும் சில சமயங்களில் உறங்காமல் இருக்கும் மற்றைய விலங்கினங்களின் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து 46 மணிநேரங்கள் உறங்காமல் 30 கிலோமீட்டர் கள் தூரம் நடக்கும்
ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.
உலகில் மூன்று வகையான யானை இனம் காணப்படுகின்றது
- ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்
- ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்
- ஆசிய யானைகள் ஆகும்
ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை
ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை.
யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.
Tuesday, October 24, 2017
விலங்கினங்களின் ஒலி
October 24, 2017
1 comment
விலங்கினங்களின் ஒலி
விலங்குகள்
|
ஒலி
|
நரி
|
ஊளையிடும்
|
ஓநாய்
|
ஊளையிடும்
|
கழுதை
|
கத்தும்
|
சிங்கம்
|
கர்ச்சிக்கும்
|
புலி
|
உறுமும்
|
யானை
|
பிளிறும்
|
குதிரை
|
கனைக்கும்
|
கரடி
|
உறுமும்
|
சிறுத்தை
|
உறுமும்
|
எருது
|
எக்காளம்
|
பசு
|
கதறும்
|
நாய்
|
குரைக்கும்
|
பூனை
|
சீறும்
|
விலங்குகள் - வீடு பிராணிகள்
October 24, 2017
24 comments
மாடு
எருது
பசு
கன்று
எருது எக்காளம்,
பசு கதறும்
தாவர உண்ணி
ஆடு
![]() |
ஆடு |
ஆடு ஒரு தாவர உண்ணிப் பாலூட்டி விலங்கு ஆகும். தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.
எனினும் தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.
அனடோலியாவிலுள்ள சக்ரோஸ் மலைத்தொடர் தான் ஆடுகளின் பூர்வீகம் என்று மரபணு சோதனைகள் நமக்குக் காட்டுகின்றன
பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன
Subscribe to:
Posts (Atom)